9வது தேசிய அளவிலான சப் ஜூனியர் மற்றும் 2வது மிக்ஸ்டு சப் ஜூனியர் இலக்குப்பந்து போட்டியானது மகாராஷ்டிரா மாநிலம் சாய் நகர், ஷீரடியில் நடைபெற்றது. இதில் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஹரியானா, தெலுங்கானா, குஜராத், மற்றும் மத்திய பிரதேஷ் ஆகிய 14கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து இலக்குப்பந்து வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 9வது சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் தமிழக அணி இரண்டாம் இடத்தையும் 2வது சப் ஜூனியர் கலப்பு பிரிவில் தமிழக அணி இரண்டாம் இடத்தையும் தட்டிச் சென்றன. வெள்ளி பதக்கம் மற்றும் கோப்பையுடன் தமிழகம் திரும்பிய இலக்குப்பந்து வீர வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் சந்தன மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதில் ஆண்கள் அணியை காட்பாடி ரயில் நிலையத்தில் வேலூர் மாவட்ட இலக்குப்பந்து பொதுச் செயலாளர் எம் கே சூர்யா தலைமையிலும் மற்றும் மகளிர் அணியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுர மாவட்ட இலக்குப்பந்து கழகத்தின் தலைவர் ஜெயசூர்யா அவர்களின் தலைமையிலும் வரவேற்பு அளித்தனர்.
வெற்றி பெற்ற வீராங்கனை இலக்குப்பந்து கழகத்தின் தலைவர் சசிகுமார் மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் மாநில பொதுச்செயலாளர் முனைவர் ஜமால் ஷரிப் க பா
நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.




Leave a Reply