கடந்த 24 முதல் 30 வரை அகில இந்தியா அளவிலான மாபெரும் கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது.இதில் 16 க்கும் மேற்பட்ட அணிகள் பல்வேறு மாநிலத்திலிருந்து அணிகள் கலந்து கொண்டனர்.முதல் லீக் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் பருல் பல்கலைக்கழகம் குஜராத் அணியை எதிர்கொண்டது இதில் 23- 26 புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது. இரண்டாம் லீக் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் அகல் காலேஜ் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது இதில் 26-29 புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது. முதல் முதல் கால்இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் ராயல் கிங்ஸ் குஜராத் அணியை எதிர்கொண்டது இதில் 21-36 புள்ளிக் கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது. அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் ஸ்பெசிபிக் ராயல் ப்ளூ அணியை எதிர்கொண்டது.இதில் 34-30 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது .வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழகம் வேந்தர் ப்ரொஃபஸர் முனைவர் வெங்கடாஜலபதி பதிவாளர் முனைவர் ரவி உடற்கல்வி இயக்குனர் சுதாகர் பயிற்சியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பாராட்டினார்.


Leave a Reply