மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி 

 பள்ளி மாணவிகளுக்கான  கிரிக்கெட் போட்டி- ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி சாம்பியன்

கோவை சாய்பாபாகாலனி அழகேசன் சாலையில் உள்ள டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் ராமலிங்க செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி வித்யாலயம் பள்ளி என 4 அணிகள் போட்டியிடுகின்றன. 

இந்த போட்டியை ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்து போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

கிரிக்கெட் போட்டி துவங்கியதும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் போட்டியில் விளையாடும் மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.நடைபெற்ற இறுதி போட்டியில் 10 ஓவர் முடிவில் ஸ்ரீ ஜெயேந்திர அணி விக்கெட் ஏதும் இழப்பின்றி 147 ரன்கள் எடுத்தனர்.அதிகபட்சமாக அபர்ணா 62 ரன்களும்,பிரத்ன்யா 50 ரன்களும் எடுத்தனர்.பின்னர் ஆடிய MVM பள்ளி மாணவிகள் 10 ஓவர் முடிவில் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.வெற்றி பெற்ற அணி கோப்பை வழங்கபட்டது.