மாநில அளவிலான கபடி போட்டியில்
கற்பகம் பல்கலை. இரண்டாம் இடம்
கடந்த 25 முதல் 26 வரை மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பாறையில் நடைபெற்றது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டனர். முதல் கால் இறுதிப் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழகம் அணியினரும் சவுத் கிங்ஸ் ராமநாதபுரம் மாவட்ட அணியும் எதிர்கொண்டது, இதில் 34-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழகம், துரைசிங்கம் ஸ்போர்ட்ஸ் கிளப் தூத்துக்குடி அணியை எதிர்கொண்டது இதில் 34-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலை. அணியும் பிரிஸ்ட் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் அணியை எதிர்கொண்டது. இதில் 24-31 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலை. அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கோவிந்தராஜ் அவர்களுக்கும் கற்பகம் கல்வி குழுமங்களின் தாளாளர் முனைவர் வசந்தகுமார் மற்றும் முதன்மை கல்வி இயக்குனர் திரு முருகையா அவர்களும் மேலும் கற்பகம் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி , பதிவாளர் முனைவர் ரவி உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Leave a Reply