செவன்த் டே பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்  நடைபெற்றது..

தூத்துக்குடி மாவட்டம் முதலூரில் அமைந்துள்ள செவன்த் டே  பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சோபுகாய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர்  மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார்  தலைமையில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே தலைவர் சென்சாய் செந்தில் பயிற்சி அளித்தார் இந்த பட்டய தேர்வில் செவன்த் டே அட்வென்டிஸ்ட்  பிரைமரி பள்ளியின் முதல்வர் திரு.ரமேஷ் சான்றிதழை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர்  சென்சாய் முத்துராஜா செய்திருந்தார் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்