தேசிய கராத்தே போட்டி 

ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா (SGFI) சார்பில், புதுடில்லி, தியாகராஜ், விளையாட்டு அரங்கில், தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது

பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில், திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி, சஸ்மிதா பங்கேற்றார்; வெண்கலம் வென்றார். வெற்றி பெற்ற மாணவியை புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியை ராஜேஸ்வரி, வி கராத்தே அகாடமி நிறுவனர் விஸ்வநாத் உள்ளிட்டோர் பாராட்டினர்.